பெரம்பலூர், ஜூன் 12: பெரம்பலூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணி துவக்க விழாவிற்கு தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முகமது யூசூப் முன்னிலை வகித்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் துவங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பாலக்கரை பகுதியில் துவங்கிய பேரணி, பெரம்பலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் முடிந்தது.