ஸ்ரீபெரும்புதூர், ஜூன் 12: ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸ் என, டாஸ்மாக் கடை ஊழியர்களை மிரட்டி மதுபாட்டில்கள் வாங்கி சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஓரகடத்தில் பாருடன் கூடிய அரசு டாஸ்மாக் கடை இயங்குகிறது. கடந்த சில நாட்களாக இங்கு வந்த ஒரு வாலிபர், வாலாஜாபாத் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் எஸ்ஐ என கூறி, டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மதுபாட்டில்கள், சிகரெட் மற்றும் உணவு பண்டங்கள் ஆகியவற்றை வாங்கியுள்ளார்.தொடர்ந்து அவரது தொல்லை அதிகரித்ததால், இங்கு வேலை பார்க்கும், சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த பார் மேலாளர் செல்லதுரை (35), ஓரகடம் போலீசில் புகார் அளித்தார்.