வேலூர், ஜூன் 12: வேலூர் பெண்கள் சிறையில் கைதியின் 8 மாத குழந்தை வயிற்று போக்கு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளது. வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி(33) என்ற பெண் கொலை வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு 8 மாத குழந்தையும் சிறையில் உள்ளது.