கும்பகோணத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கும்பகோணம், ஜூன் 11: கும்பகோணம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 13ம் தேதி நடக்கிறது.

தஞ்சை மேற்பார்வை பொறியாளர் சங்கரன் தலைமை வகிக்கிறார். இதில் கும்பகோணம் நகரம், புறநகர், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, திருக்கருகாவூர், கணபதி அக்ரஹாரம் பிரிவு அலுவலகம் பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: