மாமங்களம் ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலையால் மாணவர்கள் அவதி

முஷ்ணம், ஜூன் 11: முஷ்ணம் அருகே மாமங்களம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கிழக்கு தெரு பேருந்து நிறுத்தம் செல்லும் சாலை கடந்த ஓராண்டிற்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலை பல்வேறு இடங்களில் பழுதடைந்துள்ளது. மேலும் பேருந்து நிறுத்தம் வரை சென்னை, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதி வரை பாதிசாலை அமைத்தும், பாதி சாலை அமைக்கப்படாமலும் உள்ளது. இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த பகுதியை கடந்து பல்வேறு பகுதியில் இருந்து பள்ளி வாகனங்கள் அதிக அளவு வருவதுடன் இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கல்வி கற்க வரும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை முழுமையாக சரி செய்து பொதுமக்கள் எளிதில் சென்று வர அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: