வேதாரண்யம், ஜூன் 11: சூறைக்காற்று அதிகம் வீசுவதால் வேதராண்யம் பகுதி மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.நாகை மாவட்டம் வேதாரண்யம தாலுகா ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வௌ்ளப்பள்ளம், வானவன்மாகதேவி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் கடலில் காற்று அதிகமாக வீசுவதால் சுமார் 5000 பைபர் படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் படகுகள் அனைத்தும் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல் சீற்றமாக காணப்படுவதால் பைபர் படகு மீனவர்கள் முற்றிலும் மீன்பிடிக்க செல்லவில்லை.