தேனி, ஜூன் 11: நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீட்தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லெனின், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணைச்செயலாளர் பாலசந்திரபோஸ் கலந்து கொண்டு பேசினார்.