ஆத்தூர், ஜூன் 11: தலைவாசல் ஒன்றிய திமுக சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, திமுக பொறுப்பாளர் பழனிசாமி தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் சிவ.செல்வம் வரவேற்றார். தலைமைகழக பேச்சாளர்கள் கரூர் முரளி, பூலாவரி ஜெயவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, கள்ளக்குறிச்சி எம்பி கௌதமசிகாமணி பேசுகையில், ‘என்னை வெற்றி பெறச்செய்த வாக்காளர்களுக்கு நன்றி. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்வேன். மத்திய அரசின் உதவியோடு ஆறகளூரில் உள்ள சிவன் கோயிலை மெருகூட்டி, அதன் பெருமையை வெளிக்கொண்டு வருவேன்.