தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை

சேலம், ஜூன் 11: சேலத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகையை ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். சேலம் சூரமங்கலம் முல்லைநகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவர் கோயம்புத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் வேலூர். கடந்த 6ம் தேதி வேலூரில் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக கடந்த 6ம்தேதி ஊருக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் செந்தில்குமார் சேலம் திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிலிருந்த 10.5 பவுன் நகை, 2 வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவற்றை மர்மநபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி சூரமங்கலம் போலீசில் செந்தில்குமார் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: