தூத்துக்குடி, ஜூன் 11: தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும்; இரவில் சிறு வியாபாரிகள் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் கலெக்டரிடம் வலியுறுத்தினர். இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் வணிகர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்துள்ள மனு:
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் சொத்து வரி உயர்வு பிரச்னை மக்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். மேலும், மாநகராட்சி ஊழியர்கள் வரி வசூல் செய்வதில் கடுமையான போக்கை கையாள்கின்றனர்.