திருவண்ணாமலை, ஜூன் 11: திருவண்ணாமலை அருகே வாகனங்களில் செல்பவர்களிடம் வழிபறி செய்ய சதிதிட்டம் தீட்டிய 5 பேரை போலீாசர் கைது செய்தனர். திருவண்ணாமலை தாலுகா இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் நேற்று திருவண்ணாமலை-மணலூர்பேட்டை சாலை கீழ்அனக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள பாலத்தின் அருகே சந்தேகப்படும் படியாக 5 பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டு அனைவரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை விரட்டி சென்று 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.