விருதுநகர், ஜூன் 7: விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பராமரிப்பின்றி பொலிவிழந்து கிடக்கும் குத்துச்சண்டை மைதானத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள் விளையாட்டு மற்றும் வெளி விளையாட்டுகளுக்கு என தனித்தனியே மைதானங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் விளையாட்டு அரங்கத்திற்குள் அமைந்துள்ள குத்துச்சண்டை மைதானம் பராமரிக்கப்படாமல் பொலிவிழந்து காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக குத்துச்சண்டை மைதானம் பராமரிக்கப்படாததால் தலங்கள் உடைந்தும் புற்கள் மற்றும் செடி வளர்ந்து அலங்கோலமாக காணப்படுகிறது.