அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மேற்கு, 18வது மெயின் ரோட்டில் செந்தில்முருகன் (42) என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 3ம் தேதி, இந்த கடைக்கு வந்த ரஞ்சித்குமார் என்ற வாலிபர், அங்கு பணிபுரியும் பெண்ணிடம், தன்னை காதலிக்கும்படி தொல்லை செய்தார். அவர் மறுக்கவே, ரகளை ரஞ்சித்குமார் ரகளையில் ஈடுபட்டார். இதை சூப்பர் மார்க்கெட்டின் மேலாளர் கார்த்திக் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார், 24 ரவுடிகளை வரவழைத்து கார்த்திக்கை சரமாரி தாக்கி, கடையில் இருந்த பொருட்களை சூறையாடினார்.