கோத்தகிரி அருகே முள்ளம்பன்றியை வேட்டையாடிய சிறுத்தை பலி

குன்னூர், ஜூன் 5:  கோத்தகிரி பகுதியில் முள்ளம்பன்றியை வேட்டையாடி சாப்பிட்ட சிறுத்தை பலியானது. கோத்தகிரி அருகே உள்ள லாங்வுட் சோலா பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதை கண்ட தேயிலை தோட்ட தொழிளாலர்கள்  வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிேசாதனை செய்தனர். அதில் சிறுத்தை முள்ளம் பன்றியினை வேட்டையாடி அதனை முள்ளுடன் உண்டதால் அவற்றின் முற்கள் சிறுத்தையின் வயிற்று பகுதி மற்றும் தொண்டைப்பகுதியில் கிழித்துள்ளது. அதனால் சிறுத்தை உயிரிழந்துள்ளது என தெரிவித்தனர்.

Related Stories: