அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்

புவனகிரி, ஜூன் 5: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கழுக்காணிமுட்டம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(44). அரசு பஸ் டிரைவரான இவர் சிதம்பரம் - கடலூர் வழித்தடத்தில் ஓட்டிச் சென்றார். புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு என்ற கிராமத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி, அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ் டிரைவர் கமலக்கண்ணன், கண்டக்டர் குழந்தைவேல் (48), பயணிகள் ஜெயராமன் (74), பாலமுருகன் (47), பெருமாள் (50), அம்சா (72), ராஜ்குமார் (32), கிளியோபாட்ரா (33),  வேல்முருகன் (54) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிதம்பரம் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர், இந்த விபத்து குறித்து பஸ் டிரைவர் கமலக்கண்ணன் அளித்த புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: