முத்துப்பேட்டை அருகே தண்ணீர் லாரி மோதி 2 பேர் படுகாயம்

முத்துப்பேட்டை, ஜூன் 4: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கீழவாடியக்காடு சர்வமாண்யம் கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ்வரன்(19). அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் மகன் சந்தோஷ்(20). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள திடலில் கிரிக்கெட் விளையாடி விட்டு சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த தண்ணீர் லாரி நிலை தடுமாறி எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நடந்து வந்த இருவர் மீதும் மோதியது. இதில் இருவரது கால்களும் முறிந்து படுகாயம் அடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்.

Related Stories: