பொள்ளாச்சி, ஜன் 4: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் மாலை முதல் வைகாசி மாத அமாவாசை வழிபாடு துவங்கியது. இதையொட்டி நேற்று காலை முதல் வெளியூர் பக்தர்கள் அதிகம் வந்திருந்தனர். மேலும் பக்தர்களுக்கு வசதியாக, நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை என விடிய விடிய கோயில் நடை திறந்திருந்தது.