தரங்கம்பாடி, ஜூன் 4: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஆஞ்சநேயர்கோவிலில் கடை வைத்திருப்பவர் வீட்டில் 20 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அனந்தமங்கலம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் லதா (48). இவர் அங்குள்ள ஆஞ்சநேயர்கோவில் சன்னதி தெருவில் அர்ச்சனை தட்டு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அமாவாசை என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. லதா வியாபாரத்தை முடித்துவிட்டு அதிகாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் ஜன்னல்கம்பி அறுக்கப்பட்டு பிரோக்கள் உடைக்கப்பட்டு இருப்பதையும் பீரோவில் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பொறையார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.