கந்தர்வகோட்டை, மே 30: கந்தர்வகோட்டை ஒன்றிய பகுதிகளில் குடிதண்ணீர் தட்டுபாட்டால் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட அறிவிப்பு வெளியிட்டனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.கந்தர்வகோட்டை நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் மின்தடை காரணமாகவும், நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றதன் விளைவாக தண்ணீர் பிரச்னை அதிகளவு உள்ளது. நகர் பகுதிகளில் வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் தண்ணீரை சிலர் மோட்டார் வைத்து உறிஞ்சி விடுவதால் அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.கல்லாக்கோட்டையில் புதிய துணைமின் நிலையம் அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. அதற்கு அவ்வப்போது மின்சாரத்தை துண்டித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வேலாடிப்பட்டி, வௌ்ளாளவிடுதி மற்றும் கல்லாக்கோட்டை பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் தண்ணீர் தட்டுபாடு நிலவி வருகிறது. இதை கண்டித்து நேற்று சாலைமறியல் போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். உடனே கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் கலைமணி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.