அரியலூர், மே 30: திருமானூர் அருகே வீரசக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள தூத்தூர் கிராமத்தில் வீரசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 27ம் தேதி காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. அதைதொடர்ந்து முதல்கால யாகசாலை பூஜை, 28ம் தேதி 2ம் கால யாகசாலை பூஜை, 3ம் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இதைதொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.