பொள்ளாச்சி, மே 30: பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இதில், வடக்கிபாளையம், சூலக்கல், தாளக்கரை, ஆர்.பொன்னாபுரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 35 விவசாயிகள் மொத்தம் 49 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். விவசாயிகள் கொண்டு வந்த கொப்பரைகள் அனைத்தும், முதல் மற்றும் இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.