கோவை, மே 30: கோவையில் காய்ச்சல் காரணமாக 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி கவுசல்யா மரகதம்(30). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சைபலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவர் மூளைக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.