சத்தியமங்கலம், மே 30: புஞ்சைபுளியம்பட்டி ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). இவருக்கும், கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த ஐஸ்வர்யா (25) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், இரவு ஐஸ்வர்யா வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கருப்புசாமி நேற்று புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.