கஞ்சா விற்பனை: ரவுடி உள்பட 3 பேர் கைது

திருச்சி, மே 29:  திருச்சி பாலக்கரை பெல்ஸ் கிரவுண்ட் அருகே உள்ள வள்ளலார் கோயில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ்க்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ஆய்வுக்கு சென்ற போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பியோடினர். இருவரையும் விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் விற்பனை பணம் ரூ.150 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் பாலக்கரை காஜாப்பேட்டை வேம்படி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி விஜி (50), காஜாப்பேட்டை மேலகிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த யேசு(50) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் ரவுடி விஜி மீது பாலக்கரை காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொருவர் கைது:  இதுபோல் தில்லைநகர் குப்பாங்குளம் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்ற அதே பகுதி கண்ணன் ஸ்டோரை சேர்ந்த தினேஷ்(எ)தினேஷ்குமாரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.150 ஆகியவற்றை எஸ்ஐ நவீன்குமார் பறிமுதல் தினேஷ்சை கைது செய்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: