புதுக்கோட்டையில் சிஐடியூ மாவட்ட மாநாடு வரவேற்பு குழு கூட்டம்

புதுக்கோட்டை, மே 29: சிஐடியூ  புதுக்கோட்டை மாவட்ட 11வது மாநாடு புதுக்கோட்டையில் வருகிற ஜூலை  மாதம் 28ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை  வெற்றிகரமாக நடத்துவதற்கான வரவேற்புக்குழுக் கூட்டம் புதுக்கோட்டையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் மாநில செயலாளர் ஜெயபால் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில்  வரவேற்புக்குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாவட்ட  செயலாளர் முகமதலிஜின்னா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: