கோவை, மே 29: கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டி-20 போட்டியில் ஆர்.எம்.எம்.சி.சி அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி காஸ்மோ வில்லேஜ் அணி வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஆகியவை சார்பில் மாவட்ட அளவிலான டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டம் முழுவதுமிருந்து 42 அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடக்கிறது. நேற்று பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில், காஸ்மோ வில்லேஜ் அணியும், ஆர்.எம்.எம்.சி.சி அணியும் மோதின. காஸ்மோ வில்லேஜ் அணி டாஸ் வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கருப்பசாமி 41 ரன்களும், கவுதம் 34 ரன்களும் எடுத்தனர். 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.எம்.எம்.சி.சி அணி இரண்டாவது பேட்டிங்கை துவக்கியது.