நீடாமங்கலம் சமுதாயக்கரை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா

நீடாமங்கலம், மே 28: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள  சமுதாயக்கரை கிராமத்தில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 8ம்  ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு கடந்த 20ம் தேதி  ஆலயத்தில் கொடி ஏற்றத்துடன் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து  நேற்று மாலை மன்னார்குடி பங்குத்தந்தை செலஸ்டின் அடிகளார் பாடல்  திருப்பலி நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து இரவு மின் விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையின் தேர்பவனி  மடப்புரம், காரிச்சாங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வாண வேடிக்கைகளுடன் சென்று வந்தடைந்தது. ஏராளமனோர் கலந்து கொண்டனர். இன்று காலை  அன்னையின் கொடி இறக்கம் நடைபெறுகிறது.

Related Stories: