தேசிய கைப்பந்து, கூடைப்பந்து போட்டி தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

குமாரபாளையம், மே 28:  பஞ்சாபில் நடைபெற்ற தேசிய கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் தமிழ்நாடு அணி தங்க பதக்கங்களை கைப்பற்றியது. இந்த அணியில் இடம் பெற்ற குமாரபாளையம் நடராஜா கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய அளவிலான கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குரு நானக்தேவ் பல்கலை கழகத்தில் நடைபெற்றது. இருபது வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான இந்த போட்டியை இந்திய விளையாட்டு மேம்பாட்டு கழகம் நடத்தியது. கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்கம் வென்றனர். தங்கம் வென்ற தமிழ்நாடு அணியில் இடம் பெற்ற குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பொறியியல் கல்லூரி மாணவர்கள் மௌலி, முகுந்தன், திலின்டன் விமல்ராஜா, மருந்தியல் கல்லூரி மாணவர்கள் தமிழ்செல்வன், கார்த்திக், கூடைப்பந்து அணியில் பங்கேற்ற மாணவர்கள் சுர்ஷித் பாஷா, லோகநாதன், ராஜ்மோகன், தமிழ்செல்வன், கருணாகரன், மகாவிஷ்ணு, சேரன், ஆகியோருக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது. சாதனை படைத்த தமிழ்நாடு அணியில் இடம்பெற்ற மாணவர்களை நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: