தி.பூண்டி தண்டலைச்சேரி பாரதிதாசன் பல்கலை மாதிரி கல்லூரியில் மாணவர் சேர்ப்பு

திருத்துறைப்பூண்டி, மே 25: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தண்டலைச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியில் 2019-20ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 29ம் தேதி முதல் விண்ணப்ப விற்பனை தொடங்கியது. மே 13ம் தேதி வரை 1354 விண்ணப்பங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பி.ஏ. தமிழ் பாடப்பிரிவிற்கு 306 விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 24ம் தேதி பி.ஏ. தமிழ் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற மாணவிக்கு சேர்க்கை சான்றை கல்லூரி முதல்வர் சக்திவேல் வழங்கினார்.

Related Stories: