கரூர், மே 25: மழைக்காலம் துவங்கும் முன்பு தோட்டக்குறிச்சி பாசன வாய்க்கால் மதகை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் அருகே உள்ள தோட்டக்குறிச்சி பாசன வாய்க்காலில் உள்ள மதகு பழுதடைந்துள்ளது. சிமெண்டு மேடையில் உள்ள காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. மழைக்காலம் துவங்கும் முன்னரே வாய்க்கால் மதகை பொதுப்பணித் துறையினர் சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.