குளித்தலை, மே 25: குளித்தலை பரிசல்துறை ரோட்டில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்த 2 பேரை கைது செய்தனர்.குளித்தலை எஸ்ஐ சிரோஸ்கான் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது குளித்தலை பரிசில் துறை ரோட்டில் லாரியில் மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்ததாக குளித்தலை சுங்க கேட் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தில்குமார் (29) சங்கிலி ராயன் கோவில் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மணிகண்டன் ( 28) ஆகிய இருவரையும் கைது செய்தார். லாரியையும் , அதில் இருந்த 2 யூனிட் மணலையும் பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.