பொன்னேரி, மே 25: மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியை 2வது முறையாக தக்க வைத்துள்ளது. இதனை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பாஜவினர் பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க வெற்றியை கொண்டாடினர். பின்னர் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதனையடுத்து பாஜகவினர் ஊர்வலமாக ஊர்வலமாக வலம் வந்தனர்.