நாமக்கல், மே 25: நாமக்கல் பாரதி உயர்நிலைப்பள்ளியில், கடந்த 1997ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்aகள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் சாரதாமணி தலைமை வகித்தார். ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி கற்பித்த அனைத்து ஆசிரியர்களும் விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் ஆசிரியர்களுக்கு, மாணவர்கள் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.