நாமக்கல், மே 25: நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் நேற்று முன் தினம் திருச்செங்கோடு விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் இரவே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் தொகுதி வாரியாக எடுத்துச்செல்லப்பட்டு, அந்தந்த சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது.