மேலூர், மே 25: மேலூர் சிவன்கோயில் அருகில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்த கோயிலின் திருவிழா மே 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலூர் நகர் மட்டுமல்லாது பல்வேறு கிராம மக்களும் இதற்காக நேர்த்திக்கடன் இருந்து வருகின்றனர். விழாவின் ஒரு அங்கமாக நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.