ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி கோயில் பிரசாதம் தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்

திருமலை, மே 25: ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி கோயில் பிரசாதத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர். ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும் 30ம் தேதி மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தலைமையில் அதிகாரிகள் வேத பண்டிதர்கள் கிருஷ்ணா மாவட்டம், தாடேப்பள்ளியில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டிற்கு நேற்று சென்று தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர். அப்போது சிறப்பு அதிகாரி சேஷாத்திரி, பொக்கசம் பொறுப்பாளர் குருராஜராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: