சீரமைக்க பயணிகள் கோரிக்கை கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மே 23: கிராமப்புற அஞ்சலகங்களில் இணையதள வசதி முறையாக வழங்க கோரி திருவாரூரில் நேற்று அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமபுற அஞ்சலகங்களில் இணையதள வசதி என்பது சரிவர கிடைக்காததன் காரணமாக வாடிக்கையாளர்கள் கணக்கு சரிவர பராமரிக்க முடியாமல் இருப்பதாகவும், மேலும் தினந்தோறும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், எனவே உடனடியாக இணையதள சேவையை சரியான முறையில் வழங்கிட வேண்டும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று தலைமை தபால் நிலையம் முன்பாக அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிளை செயலாளர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் செயலாளர் ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: