திருப்புத்தூர், மே 22: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே ஆலங்குடி மதகடி நாச்சி அம்மன் கோயில் 29ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரியமாடு பிரிவில் 7 ஜோடிகள் பங்கேற்றன. அதில் அ.வல்லாலப்பட்டி குமார் மாடு முதல் இடத்தையும், மேலூர் நாகப்பன்பட்டி செந்தில் இரண்டாம் இடத்தையும், வெளிமுத்தி வாகிணி மூன்றாம் இடத்தையும், கூத்தலூர் சர்தையா நான்காம் இடத்தையும் வென்றனர்.