மதுரை, மே 21: வேலூர் அரசு விளையாட்டு விடுதியில் சேர பளுதூக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளது. மதுரை உள்பட 6 மாவட்டத்தினரும் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் பளுதூக்கும் விளையாட்டில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சாதனை புரிந்து வருகின்றனர். இதனையொட்டி வேலூரில் முதன்மை நிலை விளையாட்டு மையம் உருவாக்கப்படுள்ளது. இங்குள்ள அரசு விடுதியில் சேர்வதற்கு பளுதூக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 7,8,9 மற்றும் 11ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் இளநிலை முதுநிலை பட்டப்படிப்புகளில் முதலாமாண்டு பயில உள்ள விளையாட்டு திறமை மிக்க மாணவ, மாணவிகள் தகுதியின் அடிப்படையில் பளுதூக்குதல் விளையாட்டுகளில் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த வாய்ப்பை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.