விழிப்புணர்வு கருத்தரங்கம்திருச்செங்கோடு, மே 21: நாமக்கல் மக்கள் பாதை அமைப்பின் எலச்சிபாளையம் ஒன்றியம் சார்பில், கிராமங்களை வலுப்படுத்த கிராம இளைஞர்கள் கிராம சபை மற்றும் கிராம நிர்வாகத்தில் பங்கேற்று மக்கள் முன்னேற்றத்தில் பங்கெடுக்கும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயிலரங்கம் மற்றும் கலந்தாலோசனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரோடு சட்டப்பஞ்சாயத்து இயக்த்தைச் சேர்ந்த கண்ணையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விளக்கி கூறினார். மேலும், இளைஞர்கள் ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு கிராம நிர்வாகம், கிராமத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வரவு-செலவு, வளர்ச்சி திட்டங்கள் குறித்த தீர்மானங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து விளக்கி கூறினார்.