மறைந்த விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அழகர் சாமி உருவப்படம் முத்தரசன் திறந்து வைத்தார்

இலுப்பூர், மே 21: புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் அக்கட்சியின் மறைந்த மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்ட குழுவின் கவுரவ தலைவர் அழகர் சாமி திருவுருவ படத்தை மாநில தலைவர் முத்தரசன் திறந்து  வைத்தார். அன்னவாசலில் நடைபெற்ற  இக்கூட்டத்திறகு மாவட்ட தலைவர் மாதவன் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராசு, திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இந்திரஜித், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோமையா. ஒன்றிய செயலாளர் விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனா. மாநில குழு உறுப்பினர் தர்மராஜன் வரவேற்றார். சிவகங்கை  மாவட்ட செயலாளர் கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன், இந்திய யூனியன் முஸ்லிம லீக்  மாவட்ட செயலாளர் அஸ்ரப் அலி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் புகழ் அஞ்சலி உரையாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அழகர்சாமி திரு உருவபடத்தை திறந்த வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் செங்கோடான், சிங்கமுத்து, சுந்தர்ராஜன், ஜோசி, ஜீவானந்தம், நடராஜன், ராஜன். சுப்புலட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: