நெல்லிக்குப்பம், மே 21: நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர், சொத்து வரி பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதி முழுவதும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீருக்கான வரியை நகராட்சி வசூல் செய்து வருகிறது. மேலும் நகராட்சிக்கு சொந்தமான பல இடங்களில் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் கடை நடத்துபவர்கள் அதற்கான கடை வாடகையை சரியான முறையில் செலுத்துவதில்லை. தற்போது நெல்லிக்குப்பம் நகராட்சி மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது.