பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது

தாம்பரம், மே 21 :கடந்த 17ம் தேதி காலை மேற்கு தாம்பரம், சிடிஓ காலனி, 4வது தெரு பகுதியில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஒருவர் அவரது கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்டது, மேற்கு தாம்பரம் - திருநீர்மலை சாலையை சேர்ந்த ராஜ் (எ) சாலமன் ராஜ் குமார் (38), தாம்பரம் போலீசாரால் கண்காணிக்கப்படும் குற்றவாளி என்பதும், தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.

Related Stories: