பெரும்புதூர், மே 21: பெரும்பதூர் அருகே உள்ளிருப்பு போராட்டத்தில், ஈடுபட்ட தனியார் கார் தொழிற்சாலை ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாலையில் விடுவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். எந்தவித அறிவிப்பும் இன்றி இயந்திரங்களை இருங்காடுகோட்டையில் உள்ள வேறு ஒரு தொழிற்சாலைக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தொழிற்சாலை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கு, ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். நீதிமன்ற ஆணைப்படி தொழிற்சாலையில் உள்ள, இயந்திரங்களை அப்புறப்படுத்த தொழிற்சாலை நிர்வாகம் பணிகளை துவங்கியது.