நாகர்கோவில், மே 21: தெரிசனங்கோப்பு வெள்ளாளர் சமுதாய தர நங்கை அம்மன் சாஸ்தா கோயில் காளிஊட்டு விழா கடந்த 19ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 19ம் தேதி காலையில் சிறப்பு தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, இரவு சிறப்பு தீபாராதனை, மெல்லிசை விருந்து ஆகியவை நடந்தது. நேற்று (20ம் தேதி) காலையில் சிறப்பு தீபாராதனை, மாலையில் யானை பலி, சமயசொற்பொழிவு, இரவு குடியழைப்பு ஆகியவை நடந்தது. இன்று(21ம் தேதி) அதிகாலை 1 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 2 மணிக்கு வெள்ளிகலைமானில், சிங்காரி மேளம் மற்றும் ராஜ மேளத்துடன் அம்மன் பவனி வருதல் நடந்தது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு யானை மீது பால்குடம் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.