போதிய குடிநீர் வழங்கக்கோரி மனு

சிவகங்கை, மே 17: சிவகங்கை நகரில் போதிய குடிநீர் வழங்க வேண்டும் ஏஐடியுசி சார்பில்  நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏஐடியுசி சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:சிவகங்கை நகரில் நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ள நீர் வழங்கும் குழாய்கள் பழுது காரணமாக நீர் சரிவர கிடைப்பதில்லை. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் நீரும் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. கோடை காலமான தற்போது பொதுமக்கள் போதிய நீரின்றி கடும் அவதியடைந்து வருகின்றனர். குழாய்கள் பழுதையும், குடிநீர் விநியோகத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வார்டுகளில் அமைக்கப்பட்டு பழுதாகி செயல்படாமல் உள்ள சிறு மின் விசை பம்புகளை(சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி) சரி செய்ய வேண்டும். இதற்கான போதிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: