சிவகங்கையில் நாளை மின்தடை

சிவகங்கை, மே 17: சிவகங்கையில் நாளை(மே.18) மின் தடை செய்யப்பட உள்ளது.  சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி சிவகங்கை, புதுப்பட்டி, இடையமேலூர், தமறாக்கி, மலம்பட்டி, மேலப்பூங்குடி, வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம் உட்பட இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: