அச்சக தொழிலாளி தற்கொலை

சிவகாசி, மே 17: சிவகாசி அருகே அச்சக தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே முத்துராமபுரம் காலனியைச் சேர்ந்தவர் மோகன் (47) அச்சக அலுவலகத்தில் வேலை செய்து வந்தார். மோகன் நீண்ட நாட்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எங்கும் சிகிச்சை பலன் அளிக்காததால் மனமுடைந்த மோகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: