திருப்பூர், மே 17: திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை செயல்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு வியாதிகளுக்கு தனித்தனியாக வார்டுகள் இயங்கி வருகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏழை, எளிய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனையை முழுமையாக நம்பியுள்ளனர்மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டினுள் கர்ப்பிணிகள், குழந்தைகளை பார்க்க வரும் உறவினர்கள் காலணிகளுடன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலணிகளை வெளியே விட்டுச்செல்கின்றனர்.