களியக்காவிளை, மே 17: நாகர்கோவில் உணவு பாதுகாப்புத்துறை இன்ஸ்பெக்டர் செந்தில், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராஜேஷ், பெலிக்ஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழு நேற்று காலை களியக்காவிளையை அடுத்த திருத்துவபுரம் பகுதியில், உணவு கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் காரை நிறுத்தாமல் டிரைவர் சென்று விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.